Tuesday 25 November 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

"பொம்மை' இதழில் ஜூலை 1971 முதல் செப்டம்பர் 1972 வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.​ எழுதிய மிகச் சிறப்பான தொடர் "திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்'.​ சினிமா ரசிகர்களிடையே மிகப் பரவலான கவனத்தையும்,​​ வரவேற்பையும் பெற்ற இத்தொடரை தொகுத்து "எம்.ஜி.ஆர்.​ எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்னும் பெயரில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது விஜயா பப்ளிகேஷன்ஸ்.
​ ""ஆசை,​​ நம்பிக்கை இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பும்,​​ உறவும்தான் எத்தனை வலிமை பொருந்தியது தெரியுமா?​ எத்தனை எமன்கள் வந்தாலும்,​​ மனித எதிரிகளே வந்தாலும்,​​ தோல்விகள் தொடர்ந்து வந்தாலும்,​​ இந்த இரண்டும் பிரிவதோ,​​ இவைகளைப் பிரிக்க முயலுவதோ இயலாத காரியம்.​ என்னுடைய வெற்றிகள் என்று எவையேனும் இருந்திருக்குமாயின்,​​ அதற்கு எனது தோல்வியினால் நான் தெளிவு பெற உதவிய,​​ நியாயமான முடிவுதான் காரணம் என்பதைத் துணிவோடு,​​ ஆதாரத்தோடு என்னால் கூற முடியும்.
​ ​ மனிதனாக இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கின்றோம்.​ இந்தப் பிறவியில்,​​ இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து,​​ ரசிப்பது என்பது எல்லோருக்கும் இயலாத காரியம்.​ உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை,​​ இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர்.,​​ வெளிநாடுகளில் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கான படப்பிடிப்பை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்களையும்,​​ சுவையான சம்பவங்களையும் மிக விரிவாக எழுதியுள்ளதை,​​ விவரிக்கிறது இப்புத்தகம்.​ சினிமா ஆர்வலர்கள் படித்து பயன் பெறலாம்.
எம்.ஜி.ஆர்.​ எழுதிய "உலகம் சுற்றும் வாலிபன்'​
உரு​வான கதை
தொகுப்​பா​சி​ரியர்:​ வி.வீரபத்திரன்


இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/m-g-r-eluthiya-ulagam-sutrum-valiban-uruvana-kathai.htm


தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42




No comments:

Post a Comment